அகில பாரதிய சன்னியாசிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீமத் சுவாமி வேதாந்த ஆனந்தா, மேற்கு வங்காளம் தாருகாட்சி ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமம் ஸ்ரீமத் சுவாமி ஜபபிரியானந்தா மகராஜ், திருவண்ணாமலை ஸ்ரீமத் சுவாமி மாத்ரு சேவானந்தா, நன்னிலம் சுவாமி கோரக்ஷனந்தா சரஸ்வதி ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர் கண்காட்சியை பார்வையிட்டு வருகின்றனர்.
கும்பகோணம் எம்எல்ஏ அன்பழகன் தலைமை வகித்தார். தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடம் தலைவர் ஸ்ரீமத் சுவாமி விமூர்த்தானந்த மகராஜ் சுவாமி விவேகானந்தர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வித்தனர். கும்பகோணம் கல்வி மாவட்ட அலுவலர் சுந்தர், அரசு கவின் கலைக்கல்லூரி முதல்வர் (பொ) ரவி, பலர் கலந்து கொண்டனர்