கும்பகோணம்: புனித அந்தோணியார் தேர் திருவிழா (VIDEO)

கும்பகோணம் புனித அந்தோணியார் ஆலய தேர் பவனி திருவிழாவில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். கும்பகோணம் அருகே நான்கு ரோடு பகுதியில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் ஆண்டுத் திருவிழா கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி இன்று இரவு நடந்தது. முன்னதாக கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் ஜீவானந்தம், பங்குத்தந்தை கோஸ்மான் ஆரோக்கியராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதைத் தொடர்ந்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அந்தோணியார் சொரூபங்கள் வைக்கப்பட்டு ஆலய வளாகத்தில் இருந்து தொடங்கிய தேர்பவனி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் ஆலயத்தை அடைந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். இதையடுத்து விண்ணை அதிரும் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது.

தொடர்புடைய செய்தி