கும்பகோணம்: சிறுமிக்கு பாலியல் தொல்லை.. முதியவர் கைது

கும்பகோணம் வட்டம், தாராசுரம் சிவகாமி நகரைச் சேர்ந்த 67 வயதான ஓய்வு பெற்ற அரசு பேருந்து ஓட்டுநர் ஜெயக்குமார், 3½ வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர்கள் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் பேரில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமாரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி