தஞ்சாவூர் மாவட்டம் திருநீலக்குடி அருகே ஆண்டளாம்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் வெள்ளிக்கிழமை இறந்து கிடந்தார். தகவலறிந்த திருநீலக்குடி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து, சடலத்தை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.