கும்பகோணம் அருகே வளையபேட்டையைச் சேர்ந்த பாஜக பிரமுகர் செல்வராஜ், திருச்சேறை பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தபோது, போதையில் டூ வீலரில் வந்த மர்ம நபர் ஒருவர் காரில் மோத முயன்றுள்ளார். பின்னர் தனது நண்பர்களை அழைத்து வந்து, காரில் இருந்தவர்களை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும் காரையும் அடித்து சேதப்படுத்தியுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.