இதில் கூறியுள்ளதாவது தமிழக அரசு திருவள்ளுவர் தினம், மிலாடு நபி ஜயந்தி, காந்தி ஜயந்தி, மகாவீர் ஜயந்தி, தொழிலாளர் தினம், சுதந்திர தினம், குடியரசு தினம், வள்ளலார் தினம் போன்ற தினங்களுக்கு விடுமுறை அளித்து கௌரவிக்கின்ற தமிழக அரசு சுவாமி விவேகானந்தரின் ஜயந்தி அன்றும் மதுக்கடைக்கு விடுமுறை அளித்து கௌரவிக்க வேண்டும்.
அதற்கான அறிவிப்பை நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றி அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதில் இந்து மக்கள் கட்சி, அனுமன் சேனா மாநில பொதுச் செயலாளர் பாலா, மாவட்ட அமைப்பாளர் அரவிந்த், நகரத் தலைவர் பிரபாகரன், பூசாரி பேரவை மாவட்ட தலைவர் கார்த்தி, சிவசேனா மாநில அமைப்பாளர் வேல்முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.