அப்போது நெஞ்சு வலிப்பதாக கூறி கீழே விழுந்தார். இதனால் கூட்டம் பாதியில் நின்றது. இதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை இரவு நெஞ்சு வலிப்பதாக கூறி மேயர் சரவணன் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். இதேபோல், மாநகராட்சி பொது சுகாதாரக் குழு தலைவரும் மாமன்ற உறுப்பினருமான குட்டி (எ) இரா. தட்சிணாமூர்த்தி கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்தார்.
அங்கு விசாரணைக்கு வந்த கிழக்கு காவல் நிலைய போலீசாரிடம், திங்கள்கிழமை மாமன்ற கூட்டம் நடைபெற்றபோது, மேயர் தன்னைத் தாக்கியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளித்தார். போலீசாரிடம் கேட்டபோது, மேயரிடம் விசாரித்தோம். அவர் புகார் ஏதும் தரவில்லை என்றனர்.