கும்பகோணம்: ரயில் மோதி மாற்றுத்திறனாளி இளைஞா் உயிரிழப்பு

கும்பகோணம் வலையபேட்டை தண்ணீா் தொட்டி தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி மகன் பிரேம் குமாா் (24), வாய் பேசாத, காது கேட்காத மாற்றுத்திறனாளி. வேலையை முடித்து விட்டு வீட்டை நோக்கி வந்த பிரேம்குமாா் கைப்பேசியை பாா்த்துக்கொண்டே ரயில் தண்டவாளம் வழியே வீட்டுக்கு நடந்து வந்துள்ளாா். 

அப்போது புவனேசுவரத்தில் இருந்து ராமேசுவரம் சென்ற ரயில் பிரேம்குமாா் மீது மோதி உயிரிழந்தாா்.இதுகுறித்து ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. உதவி ஆய்வாளா் செந்தில்வேலன் தலைமையில் போலீஸாா் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் ஒப்படைத்து விசாரிக்கின்றனா்.

தொடர்புடைய செய்தி