கும்பகோணம் அருகே மகாலிங்கம் தனது நிலத்தை அளவீடு செய்ய நீதிமன்ற உத்தரவு பெற்ற நிலையில், சனிக்கிழமை அன்று அதிகாரிகள் பாதுகாப்புடன் அளவீடு செய்ய வந்தனர். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த குருசாமி, அவரது மகன் சுரேஷ், முருகன், மகன் கார்த்திக் உள்ளிட்டோர் அதிகாரிகளின் பணியைத் தடுத்து, மகாலிங்கத்திற்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக எம். மகாலிங்கம் அளித்த புகாரின் பேரில், 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.