கும்பகோணத்தில் ஒரே நாளில் 110 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்

.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மகாமகக் குளத்தில் புதன்கிழமை மாசிமக திருவிழா நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். 

இதனால் மகாமகக் குளத்தைச் சுற்றி ஒரே நாளில் ஏராளமான குப்பைகள் சேர்ந்தன. மேலும் மழை பெய்ததால் குப்பை தேங்கி துர்நாற்றம் வீசத் தொடங்கியது. இந்நிலையில் வியாழக்கிழமை காலை முதல் சுமார் 300-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மகாமகக் குளத்தைச் சுற்றிக் கிடந்த குப்பையை வாகனம் மூலம் சேகரித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து, மாநகர நல அலுவலர் மருத்துவர் திவ்யா மேலும் கூறியதாவது: மாசிமகத் திருவிழாவில் பக்தர்கள் வருகை அதிகரிப்பால் சுமார் 110 மெட்ரிக் டன் குப்பை தேங்கியது. ஆணையர் அறிவுறுத்தலின்படி குப்பையை அகற்றி மகாமகக் குளத்தைச் சுற்றி கிருமிநாசினி தெளித்து சீரமைப்பு செய்யப்பட்டது என்றார்.

தொடர்புடைய செய்தி