எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தாய்லாந்து அரசு வீட்டிலிருந்து பணியாற்றும் முறைக்கு மாற முடிவு செய்துள்ளது. தேவையான இடங்களில் முழுமையாக வீட்டிலிருந்தே பணியாற்ற ஏற்பாடுகள் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல் வியட்நாம் அரசும் தனியார் நிறுவனங்களுக்கு, எரிபொருள் பயன்பாட்டை குறைக்கும் வகையில் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை அமல்படுத்த அறிவுறுத்தியுள்ளது.