திருப்பூரில் பயங்கரவாதச் சதித்திட்டம் தீட்டிய 8 தீவிரவாதிகளை டெல்லி போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், கொலை, கொள்ளை என்பதையெல்லாம் தாண்டி, தீவிரவாதத் தாக்குதல் எனும் கொடூர உச்சத்திற்கு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து வைத்திருக்கிறது இன்றைய விடியா திமுக அரசு. டெல்லி போலீசார் வந்து கைது செய்யும் வரை திமுக அரசின் ATS என்ன செய்துகொண்டு இருந்தது? என கேள்வியெழுப்பியுள்ளார்.