மும்பையில் பயங்கரவாத தாக்குதல்.. தொலைபேசி மூலம் மிரட்டல்

மும்பையில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப் போவதாக, மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள கடற்படை கப்பல்துறை பிரிவின் கட்டுப்பாட்டு அறைக்கு, இன்று (நவ.16) இந்த மிரட்டல் அழைப்பு வந்துள்ளது. மிரட்டல் விடுத்த நபரின் பெயர் ஜஹாங்கீர் ஷேக் என்பது தெரியவந்துள்ளது. மும்பையில் பயங்கரவாத தாக்குதல் நடக்கப் போவதாக வந்த அழைப்பை அடுத்து, போலீசார் உள்பட அனைத்துப் பாதுகாப்புத் துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி