இது தொடர்பாக தென்காசி மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் (பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பிரிவு) ரமேஷ் விசாரணை மேற்கொண்டார். இதில், சமூக வலைதளங்களில் வெளியான, காவலர் கூறிய புகார்கள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை. மேலும், காவலர் கொடுத்த மனுவில் உயர் அதிகாரிகள் பற்றி உண்மைக்குப் புறம்பான தகவல்களை சித்தரித்து எழுதியுள்ளார். பிரபாகரன் கடந்த 1.3.2023ஆம் தேதி முதல் விட்டோடியாகி 4.10.2024ஆம் தேதி பணிக்கு அறிக்கை செய்துள்ளதோடு, காவலர்கள் வெளிநாடு செல்வது குறித்து தவறான தகவல்களை சமூக வலைதளத்தில் பரப்பிய செயல்களுக்காக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் உயர் அதிகாரிகள் மீது உண்மைக்குப் புறம்பான தகவல்களை சித்தரித்து, கையொப்பமிடாத மனுவை காவல்துறை தலைமை இயக்குநருக்கு அனுப்பியதாகவும், சமூக வலைதளங்களில் பேட்டி கொடுத்த விடியோவையும் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக முதல்கட்ட விசாரணை நடத்தியதில், குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என தெரியவருகிறது. எனினும், விரிவான விசாரணை நடத்தப்பட்டு, அதன் முடிவில் நடவடிக்கை எடுக்கப்படும் என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.