தென்காசி மாவட்டம் சிவகிரி, சந்தைப்பேட்டை தெருவைச் சேர்ந்தவர் க. சக்தி ராகவேந்திரன் (44). 2006ஆம் ஆண்டு காவல் துறையில் சேர்ந்த அவர் சென்னை கிளாம்பாக்கம் ஜி3 காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், அவர் கடந்த செவ்வாய்க்கிழமை காலமானார். அவரது உடல் சிவகிரிக்கு கொண்டுவரப்பட்டு காவல் துறையினரின் 30 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது. இதில் ஆயுதப்படை போலீசார் மற்றும் பல்வேறு பணிகளைச் சேர்ந்த போலீசார் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். சக்தி ராகவேந்திரனுக்கு மனைவி கவிதா (34), மகன்கள் விஷ்ணு, கணேசன், மகள் அனுசுயாதேவி ஆகியோர் உள்ளனர். அனுசுயாதேவி ராயகிரியில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 பொதுத் தேர்வை எழுதிவிட்டு வந்து தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்றார்.