எவ்வித பணிகளுக்கும் அனுமதி வழங்குவதில்லை. அனைத்து நகர்மன்ற உறுப்பினர்கள் கூறும் பணிகளை இதுவரை செயல்படுத்தவில்லை. பணிகளுக்கு கையூட்டு பெறுகிறார். குடிநீர் வழங்கல், காலை உணவு திட்டம், வாறுகால் தூர்வாருதல், சுகாதாரப் பணிகள் போன்றவை சரிவர நடைபெறாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். நகராட்சி கூட்டம் 2 அல்லது 3 மாதங்களுக்கு ஒருமுறை தான் நடத்துகிறார். இதனால் மக்களிடம் பதில் கூற முடியாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறோம்.
எனவே, அவரை நகர்மன்றத் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்ய நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர ஆணையிடுமாறு கேட்டுக்கொள்கிறோம் எனக் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே, கடந்த 31.10.23 இல் அ.தி.மு.க., திமுக உள்ளிட்ட உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். அது தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.