சிவகிரி அருகே குளத்திலிருந்து ஆண் சடலம் மீட்பு

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே காணாமல் போனவர் குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். தேவிபட்டணம் வ.உ.சி. தெருவைச் சேர்ந்த தங்கையா மகன் மாரியப்பன் (48). இவர் ஆட்டுக்குப் புல் அறுக்கச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுதொடர்பாக சிவகிரி காவல் நிலையத்தில் அவரது உறவினர் மகுடேஸ்வரன் புகார் அளித்தார். 

இந்நிலையில், தேவிபட்டணம் சண்முகநதி குளக்கால்வாயில் மாரியப்பனின் சடலம் மிதப்பது சனிக்கிழமை தெரியவந்தது. சிவகிரி காவல் ஆய்வாளர் சண்முகலட்சுமி, உதவி ஆய்வாளர் வரதராஜன் ஆகியோர் சென்று சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி