தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பஸ் நிலையம் அருகே எலுமிச்சை மார்க்கெட் இயங்கி வருகிறது. தற்போது எலுமிச்சை வரத்து குறைவாக உள்ளதால் எலுமிச்சை விலை சற்று குறைந்து காணப்படுகிறது. இதனால் இன்று (பிப்ரவரி 22) ஒரு கிலோ எலுமிச்சையின் விலை 35 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விற்பனையானது. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் எலுமிச்சை பழம் விலை குறைந்ததால் கவலை அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.