தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் கே.ரெட்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்றனர். பக்தர்கள் முளைப்பாரி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக அந்த முளைப்பாரிகளை வாகனம் மூலம் இருக்கன்குடி ஆற்றுக்கரையில் கரைப்பதற்காக 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் எடுத்துச் சென்றனர். இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.