தென்காசியில் தோ்தல் கட்டுப்பாட்டு அறை: டிஐஜி ஆய்வு

வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையை திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் (டிஐஜி) ப. சரவணன் ஆய்வு செய்தார். காவலர்களின் குறைகளைக் கேட்டறிந்து, தேவையான மின்னணு உபகரணங்கள் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தேர்தல் நாளன்று பொதுமக்கள் பாதுகாப்பாகவும், காலதாமதமின்றியும் வாக்களிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி