தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தில் இன்று (மார்: 16) ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு ஆடு வியாபாரம் நடைபெற்றது. இந்த சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகளும் வியாபாரிகளும் ஆடு வாங்கவும், விற்கவும் ஆர்வமுடன் வந்தனர். இந்த நிலையில் இன்று ஒரு ஆட்டின் விலை 5000 முதல் 8000 வரை விற்பனையானது. இதில் 100க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனையாகி 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகளும் விவசாயிகளும் தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.