அதன்படி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜி. செல்வி தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜன், ஊழியர்கள் சாலையில் சென்றுகொண்டிருந்த பள்ளி, கல்லூரிப் பேருந்துகளை ஆய்வு செய்தனர். அப்போது, அனுமதிச் சீட்டு, தகுதிச் சான்று பெறாமல் இயங்கிய கல்லூரிப் பேருந்து, தகுதிச் சான்று பெறாத 2 பள்ளிப் பேருந்துகள், பதிவு செய்யப்படாத புதிய பள்ளிப் பேருந்து ஆகிய 4 பேருந்துகளைப் பறிமுதல் செய்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டுசென்றனர்.
பதிவு செய்யப்படாமலும், அனுமதிச் சீட்டு, தகுதிச் சான்று ஆகியவை பெறாமலும் இயக்கப்படும் பள்ளி, கல்லூரிப் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை விடுத்தார்.