அப்போது தந்தை கருப்பையா வீரபாண்டியைத் தடுத்து நிறுத்தியுள்ளார். அப்போது கருப்பையாவுக்கு கை, கால், தொடை போன்ற இடங்களில் பலத்த வெட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதற்கிடையில் மகன் ஞானகுருவுக்கும் கழுத்தில் ஒரு வெட்டு விழுந்துள்ளது. இந்நிலையில் அருகில் இருந்தவர்கள் சத்தம் போடவும், வீரபாண்டி அந்த இடத்தைவிட்டு தப்பித்து ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பவம் அறிந்த சிவகிரி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆகிய இருவரையும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஞானகுரு மற்றும் கருப்பையா ஆகிய இருவருக்கும் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
நெல்லையப்பர் கோயில் தேர் ஓடும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு