தென்காசி மாவட்டம், கடையம் ஒன்றியம், கீழ் ஆம்பூரில் அமைந்துள்ள அருள்மிகு காசி விஸ்வநாதர் சுவாமி திருக்கோயிலில் அறங்காவலர் குழுவினர் பதவியேற்பு விழா நேற்று (செப்.,30) நடைபெற்றது. அறங்காவலர் குழு தலைவராக கீழாம்பூர் மூர்த்தி, உறுப்பினர்களாக மஞ்சபுளி தெரு சுரேஷ், கீழாம்பூர் கிருஷ்ணவேணி ஆகியோ ருக்கு நியமன உத்தரவினை உதவி ஆணையாளர் கவிதா வழங்கினார்.
தொடர்ந்து அவர்கள் பதவியேற்று, உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கடையம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜெயக்குமார், கோவில் ஆய்வாளர் சரவணகுமார் செயல் அலுவலர் கேசவ ராஜன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கே. என். எல். சுப்பையா, குழு உறுப்பினர்கள் சண்முகவடிவு, சங்கரநாராயணன், வேல்முருகன், காலசாமி, ஒன்றிய கவுன்சிலர் சுந்தரி மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.