தென்காசி: தோரணமலை முருகன் கோயிலில் வருண கலச பூஜை

தென்காசி மாவட்டம்
தென்காசி-கடையம் சாலையில் தோரணமலை ஸ்ரீமுருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மழை வேண்டியும், விவசாயம் தழைக்க வேண்டியும் வருண கலச பூஜை நேற்று நடைபெற்றது.

இதையொட்டி அதிகாலையில் பக்தர்கள் மலை உச்சியில் உள்ள சுனையில் இருந்து கிரக குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து சப்த கன்னியர்கள், விநாயகர் மற்றும் தெய்வங்களுக்கும், மலை அடிவாரத்தில் உற்சவருக்கும் சிறப்பு அபிசேகம், வருண கலச பூஜை, நடைபெற்றது.  

 முன்னதாக மலை உச்சியில் உள்ள பத்திரகாளியம்மன் மற்றும் முருகருக்கும் சிறப்பு அபிசேகம், தீபாராதனை நடைபெற்றது.

மேலும்தோரணமலை முருகன் கோவிலில் இயங்கும் இலவச திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருந்த மணமகன், மணமகள்களுக்கான விரைவில் திருமணம் நடைபெற வேண்டி சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.

பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் ஆ. செண்பக
ராமன் செய்திருந்தார்.

தொடர்புடைய செய்தி