தொடர்ந்து அப்பர் திருவீதி உலா, உழவார்ப் பணிகள் நடைபெற்றது. தொடர்ந்து வரும் 12ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளும் சப்பர உள்பிரகார வீதி உலா சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. வரும் 8ம் தேதி காலையில் நடராஜர் பஞ்சமூர்த்திகள் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. ஐந்து தேர்கள் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. வரும் 11ம் தேதி சித்திரசபையில் நடராஜப் பெருமானுக்கு பச்சைச்சாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெறுகிறது. 13ம் தேதி அதிகாலையில் 5 சபைகளில் ஒன்றான சித்திரசபையில் நடராஜமூர்த்திக்கு ஆருத்ரா தாண்டவ தீபாராதனை நிகழ்ச்சியும், பின்னர் திரிகூடமண்டபத்தில் நடராஜருக்கு ஆருத்ரா தாண்டவ தீபாராதனை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்