மாலையில் 108 திருவிளக்கு பூஜையும், இரவு சிறப்பு பூஜையும் நடைபெற்றன. 2ம் நாள் காலை குற்றாலத்தில் இருந்து புனித தீர்த்தம் எடுத்து வருதல், தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், உச்சிகால பூஜையும், நள்ளிரவு சாம பூஜையும் நடைபெற்றன.
நிறைவு நாளான நேற்று (ஜூன் 14) பொங்கலிடுதல், கிடா வெட்டுதல், முளைப்பாரி ஊர்வலம் மற்றும் அம்மன் மஞ்சள் நீராடுதல் ஆகியவை நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை குருசாமிபுரம் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.