தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டத்திற்குட்பட்ட போகநல்லூர் கிராமத்தில் நேற்று (11.06.2025) மாவட்ட ஆட்சியர் ஏ. கே. கமலகிஷோர் தலைமையில் மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது. ஏற்கனவே முன்னோடி மனுநீதிநாள் முகாமில் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது. முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஏ.கே. கமலகிஷோர் வழங்கினார். முகாமில் அரசுத்துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.