தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அச்சம்பட்டி பகுதியில் கிணற்றில் குளிக்கச் சென்ற அரசு பள்ளி மாணவன் சுதர்சன் (16) நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார், மாணவனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.