மேலும், ராஜகுரு மற்றும் அவரது நண்பர்கள் கருப்பையா மகன் அர்ஜுன் (22), ராமச்சந்திரன் மகன் சுபாஷ் (24), ராமசாமி மகன் லட்சுமணன் (21) ஆகிய 4 பேரும் சேர்ந்து முத்து செல்வம் மற்றும் மாரியப்பனை செங்கலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இதில் காயமடைந்த இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து புகாரின் பேரில், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் வேல்பாண்டி வழக்குப் பதிந்து, அர்ஜுன், ராஜகுரு, சுபாஷ், லட்சுமணன் ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.