கோவை: தாறுமாறாக ஓடிய டிப்பர் லாரி: மதுபோதையில் விபத்து

கோவையில், நேற்று (ஜனவரி 13) மாலை ஆத்துப்பாலம் பகுதியில் அதிவேகமாக வந்த டிப்பர் லாரி, தாறுமாறாக ஓடி எதிரே வந்த புல்லட் இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர். 

படுகாயமடைந்த இருசக்கர வாகன ஓட்டுநரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆட்டோவில் இருந்த ஓட்டுநர் மற்றும் பயணி சிறு காயங்களுடன் முதலுதவி பெற்று வீடு திரும்பினர். சம்பவ இடத்திற்கு விரைந்த கரும்புக்கடை காவல்துறையினர் நடத்திய விசாரணையில், லாரி ஓட்டுநர் அதிகமாக மது அருந்தியிருந்ததால் விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

ஓட்டுநர் தனது பெயரை சரியாக கூறாமல் சுரேஷ், ரமேஷ் என குழப்பமாக பேசியதாக காவல்துறையினர் தெரிவித்தனர். அவரது வாகன ஓட்டுநர் உரிமம் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். 

இந்த விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற உயிரிழப்புகளைத் தடுக்க காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி