இதையடுத்து அந்த அருவியிலும், அதனைத் தொடர்ந்து ஐந்தருவி, பழையகுற்றாலம் அருவியிலும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. பேரருவியில் பாதுகாப்பு வளையைத் தாண்டியும், ஐந்தருவியில் கிளைகளே தெரியாத அளவிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறது. நேற்று முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது சாரல் மழையும், குளிர்ந்த காற்றும் நிலவியது. சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் குறைவாக காணப்பட்டது.
செல்லப் பிராணி உரிமம்.. நாளை முதல் ரூ.5000 வரை அபராதம்