இதனால் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்காக விடுமுறை நாட்களில் மட்டுமல்லாமல் வேலை நாட்களிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதி வருகிறது. இன்று காலையில் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மேலும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் மலை பகுதிகளில் வாசஸ்தலங்களில் கிடைக்கக்கூடிய அரிய வகை பழங்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன.
அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து புது வரவாக அபி எனும் மருத்துவ குணம் கொண்ட பழம் இந்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பலாப்பழ சீசனும் முழுமையாக தொடங்கியுள்ளதால் பலாப்பழங்கள் குற்றாலம் செல்லும் சாலையில் அங்கங்கே வியாபாரிகளால் சாலை ஓரங்களில் குவித்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை குற்றாலம் வரும் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.