ஆலங்குளத்தில் அரை கிலோ கஞ்சாவுடன் இளைஞா் கைது

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளர் கற்பகம் தலைமையிலான போலீசார் ஆலங்குளம் - அம்பாசமுத்திரம் சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது, அவ்வழியே பைக்கில் வந்த இளைஞர் போலீசாரை கண்டதும் பைக்கைத் திருப்பி வேகமாகச் செல்ல முயன்றாராம். போலீசார் அவரை மடக்கிப் பிடித்து விசாரித்ததில், ஆவுடையானூர் ராமசாமிபுரத்தைச் சேர்ந்த முருகன் மகன் ரமேஷ் (எ) சுபாஷ் (23) என்பதும், விற்பனைக்காக 500 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது. அவரைக் கைது செய்த போலீசார், கஞ்சாவைக் கைப்பற்றி ஆலங்குளம் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி