ஆலங்குளம் அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே புதுப்பட்டியில், கணவன் மது அருந்தச் சென்றதால் மனமுடைந்த அபிதா(21) என்ற இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஒன்றரை வயது மற்றும் 5 மாத குழந்தைகளை உடைய அபிதா, கணவர் மாரிச்செல்வம் அடிக்கடி மது அருந்திவிட்டு தகராறு செய்வதால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆலங்குளம் போலீசார் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்து, வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் கோட்டாட்சியர் விசாரணையும் நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்தி