தென்காசி: மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ. 60. 57 கோடி கடனுதவி

தென்காசி மாவட்டத்தில் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ. 60.57 கோடி கடனுதவி வழங்கப்பட்டது. தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னை கலைவாணர் அரங்கத்திலிருந்து மகளிர் திட்டத்தின் மூலம் மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு வங்கி கடன் இணைப்பு மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவைத் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து தென்காசி இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் ஏ.கே. கமல்கிஷோர் தலைமை வகித்து மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு கடன் உதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், ராணி ஸ்ரீகுமார் எம்பி., எம்எல்ஏக்கள் எஸ். பழனிநாடார், சதன்திருமலைக்குமார், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) மைக்கேல் அந்தோணி பொர்ணான்டோ (பொ), மாவட்ட முன்னோடிகள் வங்கி மேலாளர் கணேசன் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி