ஆனால் அந்த பயனாளிகளுக்கு தற்சமயம் வரை கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் மூலம் வீடு கட்டுவதற்கு பணி ஆணை கிடைக்காமல் மிகவும் சிரமப்படுகின்றனர். ஆதலால் தென்காசி தொகுதிக்குள்பட்ட ஏழை, எளிய மக்களின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு தேர்வு செய்யப்பட்ட அனைத்து பயனாளிகளுக்கும் கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் வீடு கட்டுவதற்கு விரைவாக பணி ஆணையை வழங்க வேண்டும் என்றார்.
இதேபோல், கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பாவூர்ச்சத்திரம் காமராஜர் தினசரி காய்கனி சந்தை முதல் ஆவுடையானூர் வரை செல்லும் தார்ச்சாலை போடப்பட்டு, 10 ஆண்டுகள் ஆகிறது. இந்த சாலை மிகவும் பழுதடைந்து உள்ளதால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் விபத்துகளால் பாதிக்கப்படுகின்றனர்.