மருதம்புத்தூரில் சமுதாய நலக்கூடத்திற்கு அடிக்கல்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள மருதம்புத்தூரில், கனிமம் மற்றும் சுரங்கம் நிதியின் கீழ், ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள சமுதாய நலக் கூடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன் தலைமை வகித்து அடிக்கல் நாட்டினாா். இதில் புதுப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் பால்விநாயகம், மருதம்புத்தூா் ஊராட்சித் தலைவா் பூசத்துரை, ஆலங்குளம் தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் சிவக்குமாா், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சண்முகராம், சங்கீதா, திமுக பிரதிநிதி சந்தானமுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தொடர்புடைய செய்தி