பத்தமடை அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்து எலக்ட்ரீசியன் பலி

தென்காசி மாவட்டம் சேரன்மகாதேவி அருகேயுள்ள புலவன்குடியிருப்பு கிராமம் காலனி தெருவைச் சேர்ந்தவர் மு. ராஜசேகர் (41). எலக்ட்ரீஷியன். இவர், பத்தமடை அருகேயுள்ள பூங்குடையார்குளம் பொத்தை அருகில் வியாழக்கிழமை பைக்கில் சென்று கொண்டிருந்த போது நிலைதடுமாறி கீழே விழுந்தாராம். 

இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த பத்தமடை போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று ராஜசேகர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி