செங்கோட்டை விவேகானந்தன் வாழ்த்துப் பேசினார். 'யாமறிந்த புலவரிலே வள்ளுவரும் பாரதியாரும்' என்ற தலைப்பில் சேவாலயா முரளிதரன், 'வள்ளுவரும் இளங்கோவும்' என்ற தலைப்பில் ராஜாராம், 'வள்ளுவரும் ஒளவையாரும்' என்ற தலைப்பில் கு. பாஸ்கர் ஆகியோர் பேசினர். இந்த விழாவில் தென்காசி திருவள்ளுவர் கழகத் தலைவர் கனகசபாபதி, செயலாளர் தீத்தாரப்பன், கடையம் திருவள்ளுவர் கழகத் தலைவர் சேதுராமலிங்கம், இணைச் செயலர் சோமசுந்தரம், ஞானசுந்தரம், பேராசிரியர் ராமச்சந்திரன், ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நடிகை பிந்து மாதவி தெலுங்கு பட உலகில் ரீஎன்ட்ரி