டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட சென்னையின் 7 இடங்களில் மூன்று நாட்களாக அமலாக்கத்துறை நடத்தி வந்த சோதனை நிறைவடைந்துள்ளது. சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள், ரொக்கத் தொகை பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மூலம் தகவல் வெளியாகியுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்த பின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.