பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தினர். பின்னர் அமைச்சர் முத்துசாமி நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு ரூ.1000 ஊதிய உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. ஆனால் கோரிக்கைகள் நிறைவேறவில்லை என அதிருப்தி தெரிவித்த பணியாளர்கள், இன்று (மார்.7) முதல் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் அலுவலகம் அருகே காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.