தமிழக அரசின் வாட்ஸ் ஆப் உதவி எண்கள் அறிவிப்பு

குமரிக்கடல் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி போன்ற மாவட்டங்களில் அதிக கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெள்ளத்தில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு பொது மக்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், தேவைப்படும் நிவாரண உதவிகள். மருத்துவ உதவிகள். மீட்பு நடவடிக்கைகள், முதலான விவரங்களை சமூக வலைதளத்தின் மூலம் கேட்டு பெறலாம் என தெரிவித்துள்ளது. வாட்ஸ்அப்எண் : 8148539914 மற்றும் டிவிட்டர் Username - @tn_rescuerelief, @tnsdma
Facebook id: @tnsdma.

தொடர்புடைய செய்தி