பழனி முருகன் கோயிலில் ஓதுவார், அர்ச்சகர் போன்ற பயிற்சிக்கு ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் ஒன்றுக்கு முழு நேர பயிற்சிக்கு ரூ.10,000, பகுதி நேர பயிற்சிக்கு ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. பயிற்சி காலம் முடியும் வரை, இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி காலத்தில் உணவு, உடை, தங்குமிடம், மருத்துவ வசதி திருக்கோயில் மூலம் கட்டணமில்லாமல் வழங்கப்படும் எனப்படுகிறது. palanimurugan.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.