கடந்த ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றம், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபர் மீதான போக்சோ வழக்கில், தகாத முறையில் தொடுவது வன்புணர்வு முயற்சி அல்ல என தீர்ப்பளித்தது. இது விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில், மூத்த வழக்கறிஞர் ஷோபா குப்தாவின் கடிதத்தை ஏற்று, உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை நேற்று (பிப்., 17) விசாரித்தது. தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் அமர்வு, உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் கடுமையான பிரிவில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.