தமிழகத்தில் பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்காமல் விடுபட்டவர்களுக்கு உதவும் வகையில், அதற்கான கால அவகாசத்தை 2026 செப்டம்பர் 26ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 2000-ம் ஆண்டிற்கு முன்பாக பிறந்தவர்கள் மற்றும் 15 ஆண்டுகள் கடந்தவர்கள் சிரமப்படுவதைக் கருத்தில் கொண்டு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பெயர் சேர்க்க விரும்பும் பொதுமக்கள், சம்பந்தப்பட்ட நகராட்சி, பேரூராட்சி அல்லது ஊராட்சி அலுவலகத்தில் உள்ள பிறப்பு - இறப்பு பதிவாளரை அணுகலாம்.