பள்ளிக்கு மாணவர்கள் இருசக்கர வாகனம் ஓட்டிவரக்கூடாது

பள்ளித் திறப்பின் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களைப் பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, மாணவர்கள் ஸ்கூட்டர், பைக் போன்ற இருசக்கர மோட்டார் வாகனங்களைப் பள்ளிக்கு ஓட்டிவரக் கூடாது எனத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி வாகனங்களை ஓட்டிவந்தால், அவற்றை உடனடியாகப் பறிமுதல் செய்து பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி