ரூட்டு தல விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் சென்னை மாநிலக் கல்லூரி மாணவர் சுந்தர் மீது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயமடைந்த சுந்தர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துவிட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து ஏற்கனவே கைது செய்யப்பட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 5 பேர் மீது தற்போது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.