சென்னை குடிநீர் ஏரிகளில் உபரி நீர் திறப்பு நிறுத்தம்

சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரங்களான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகள் தற்போது முழு கொள்ளளவை எட்டியுள்ளன. கடந்த சில நாட்களாக உபரி நீர் திறக்கப்பட்ட நிலையில், மழை தீவிரம் அடையாததால் நேற்று (நவ.21) காலை முதல் ஏரிகளில் இருந்து தண்ணீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு, தற்போது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.  வரும் நாட்களில் மழை தீவிரமடைந்தால் மீண்டும் உபரி நீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி