தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதிய ‘ததும்பும் தமிழ்ப் பெருமிதம்’ நூலை, தங்கம் தென்னரசு இன்று தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார். இதில் தமிழ் மொழியின் பெருமை, கீழடி மற்றும் பொருநை அகழாய்வுகள், சோழர் வரலாறு, தமிழுக்கான அரசாணைகள், அயலகத் தமிழர்கள் தினம் உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் இடம்பெற்றுள்ளன. தமிழின் வரலாறு இந்திய துணைக் கண்டத்தில் இருந்து எழுதப்பட வேண்டும் என்ற முதலமைச்சரின் பார்வையும் இதில் இடம்பெற்றுள்ளது.